எஸ்.ஜே.பிரசாத்
இலங்கை கபடி அணியின் இந்திய பயிற்சியாளருக்கு டொலர்கள் சம்பவம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் டொலருக்கு பதிலாக சம்பளமாக தங்கம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொலருக்கு பதிலாக இலங்கை ரூபாயில் சம்பளம் பெருவதற்கு பயிற்சியாளர் தயக்கம் காட்டியதால், மாற்று நடவடிக்கையாக அவருக்கு சம்பளம் தங்கத்தில் வழங்க இலங்கை கபடி சம்மேளன அதிகாரிகள் ஏற்பாடு செய்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தகவலை உறுதிப் படுத்திக் கொள்ள இலங்கை கபடி சம்மேளனத் தலைவர் அனுர பத்திரனவை தொடர்பு கொண்டோம்.
பயிற்சியாளருக்கு டொலர்களில் சம்பளம் வழங்குவதில் சிரமம் ஒன்று இருப்பது உண்மைதான்.
ஆனால் அவருக்கு தங்கத்தில் சம்பளம் வழங்கப்பட்டது என்பதன் தகவல் வேறு அதாவது இம்மாததிற்கான சம்பளத்தை மாத்திரமே தங்கத்தில் வழங்கினோம்.
அதாவது அவரின் சம்பளத்திற்கான மதிப்புத் தொகையை இலங்கை ரூபாயில் தங்க நகை வாங்கிக் கொள்ள செலுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.
இலங்கைக் கபடி அணியின் பயிற்சியாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.எஸ்.பாஸ்கரன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM