பிரதமர் மஹிந்த தலைமையில் அரசாங்கத்தை முன்னெடுக்க ஆளும் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

Published By: Digital Desk 4

21 Apr, 2022 | 10:14 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பலமான முறையில் முன்னெடுத்து செல்லும் யோசனை இன்று பாராளுமன்றி கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற ஆளும் தரப்பு குழு கூட்டத்தின் போது ஏகனமதாக நிறைவேற்றப்பட்டது.

ஆசிரியர் - அதிபர் சம்பளத்தை இரு கட்டமாக அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் -  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ | Virakesari.lk

சமூக கட்டமைப்பில் தோற்றம்பெற்றுள்ள பிரச்சினைகள் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு  மத்தியில் அதனை அரசாங்கம் பலமான முறையில் எதிர்க்கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் இதன்போது குறிப்பிட்டார்.

பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை தொடர்ந்து பலமான முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என  இதன் போது முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சகல உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி இணக்கம் தெரிவித்தனர்.குறித்த யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் யு.கே.சுமித் உறுதிப்படுத்தினார்.

சமூக  கட்டமைப்பில் அத்தியாவசிய சேவைத்துறையில் தோற்றம் பெற்று;ள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்வு பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை துரிதகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விடயதானங்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள் இதன்போது குறிப்பிட்டார்கள்.

நெருக்கடியான சூழ்நிலைமையை கருத்திற்கொண்டு சிரேஷ்ட அமைச்சர்கள் பதவி விலகி வழங்கிய ஒத்தழைப்பிற்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள் இதன்போது நன்றி தெரிவித்தார்.

அரசாங்கம் பலவீனமடைந்துள்ளதாக ஒருதரப்பினர் தவறான கருத்துக்களை சமூகமயப்படுத்தியுள்ளார்கள்.மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளவும்,அரசாங்கத்தை பலமான முறையில் முன்னெடுத்து செல்லவும் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன செயற்பட வேண்டும் என  பிரதமர் இதன்போது ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06