நீதிவான் திலின கமகே சி.ஐ.டி.யில் முறைப்பாடு ; விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

Published By: Digital Desk 3

21 Apr, 2022 | 09:56 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

நீதிமன்ற உத்தரவுகளை பாதிக்கும் வண்ணம்,  பொய்யான பிரசாரங்கள்  சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, நீதிபதிகள் மற்றும்  நீதிமன்றங்கள் மீதான  சுயாதீனத் தன்மை தொடர்பில்  சந்தேகங்களை ஏற்படுத்துவதாக  கூறப்படும் சம்பவம் தொடர்பில்  விசாரணை நடாத்தி, மன்றுக்கு அறிக்கையிடுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று (20) உத்தரவிட்டது. கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திலகரத்ன இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

கோட்டை நீதிவான் திலின கமகே,  கடந்த 18 ஆம் திகதி சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  சமூக ஊடக வலைத்தளம் தொடர்பிலான குற்றங்கள் குறித்து விசாரிக்கும் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகளுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

B A S L  இலக்ஷன்  2019/02  எனும் வட்ஸ் அப் குழுமம் ஊடாக, ' மோசடிக் கார யானை திருடன் நீதிமன்றுக்கு நியமிக்கப்பட்டமை தொடர்பில்  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உடன் தலையீடு செய்ய வேண்டும்.  

இல்லை எனில் பாரிய விளைவுகள் மிக விரைவில்' என  கருத்து பிரச்சரம் செய்யப்பட்டுள்ளதாக, கோட்டை நீதிவான் திலின கமகேவின் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக  சி.ஐ.டி.யினர் நேற்று நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

அத்துடன் இந்த தகவல் சமூக ஊடகங்களிடையே பரிமாற்றப்பட்டுள்ளதாகவும்,  அந்த தகவல் மக்களிடையே சென்றடையும் போது, பொது மக்களிடையே  குழப்பம் ஏற்படலாம் எனவும்,  அது நீதிமன்ற சுயாதீனத் தன்மையையும் பாதிக்கும் எனவும்  அம்முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

முறைப்பாட்டாளரான நீதிவான் திலின கமகே,  தனக்கு எதிராக சட்ட விரோத யானைக் குட்டி வைத்திருந்தமை தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டதாகவும், அவ்வழக்கிலிருந்து தான் பூரணமாக விடுதலைச் செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான பின்னணியில் இந்த சமூக ஊடக பரப்புரை முன்னெடுக்கப்படுவதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளமை   குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07