எரிபொருள், மின்சாரம் விநியோகக் கட்டமைப்பை சீராக்கவே விலையேற்றம் - காஞ்சன விளக்கம்

Published By: Digital Desk 5

19 Apr, 2022 | 10:58 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

 எரிபொருள் விலையினை குறைப்பதற்கும், தடையின்றிய வகையில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான யோசனையை எதிர்தரப்பினர் தாராளமாக முன்வைக்கலாம். 

எரிபொருள் விநியோக கட்டமைப்பினையும், மின்விநியோக கட்டமைப்பையும் சீராக முன்னெடுப்பதற்காகவே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும், லங்கா ஐ.ஓ.சி . நிறுவனமும் புதிய எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய செயற்பட எதிர்பார்க்கப்பட்டுள்ளது என  மின்சாரத்துறை மற்றும் வலுசக்திதுறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர சபையில் தெரிவித்தார். 

புதிய அமைச்சரவை பதவியேற்று 24 மணித்தியாலயத்திற்குள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதன் பின்னணி குறித்து எதிர்தரப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதை தொடர்ந்து பொது மக்கள் பாதிக்கப்பட்டு போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளமை அவதானிக்க முடிகிறது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ள நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்காத காரணத்தினால் கூட்டுத்தாபனம் நாளாந்தம் 1.6 பில்லியன் நட்டத்தை எதிர்க்கொள்கிறது.

உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம்,டொலர் நெருக்கடி ஆகிய அடிப்படை காரணிகளினால் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எரிபொருள் மற்றும் மின்சார சேவை கட்டமைப்பை சீரான முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிட்டது.

 தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எரிபொருளின் விலையை அதிகரிப்பதால் பொது மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் என்பதை எம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.

எரிபொருள்  சேவை மற்றும் அதனுடன் ஒன்றினைந்த தொழிற்துறையினருக்கு நிவாணரம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும்,லங்கா ஐ.ஓ.சி.நிறுவனமும் ஒன்றினைந்து எதிர்வரும் காலங்களில் எரிபொருள் சூததிரத்திற்கமைய செயற்பட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை குறைப்பு,எரிபொருளை தடையின்றி விநியோகித்தல் குறித்து எதிர்தரப்பினர் வசம் சிறந்த யோசனை இருந்தால் அவர்கள் அதனை தாராளமாக முன்வைக்கலாம்.

எரிபொருள் விநியோகத்தில் காணப்படும் பிரச்சினை குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத மணல் அகழ்வுகளால் நிலக் கண்ணி...

2023-03-26 20:42:59
news-image

மட்டக்களப்பு வாவியொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

2023-03-26 20:40:31
news-image

கடல் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர்...

2023-03-26 20:39:51
news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26
news-image

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி...

2023-03-26 14:11:27