சிறுத்தை புலிகள் நடமாட்டத்தால் மக்கள் சிரமம் : பொறுப்பான அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை

Published By: Robert

22 Dec, 2015 | 01:20 PM
image

அக்கரபத்தனை பெரியநாகவத்தை தோட்ட பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை புலிகள் நடமாட்டத்தால் இத்தோட்ட மக்கள் மத்தியில் பீதியியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள நாய்கள் மற்றும் கோழிகள் காணாமல் போவதாக இத்தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர்.

மாலை நேரங்களில் வெளியில் செல்லமுடியாத நிலமை தோன்றியுள்ளது. இத்தோட்டத்தினை அண்மித்து வன பகுதிகள் காணப்படுவதால் வனபகுதிகளில் உள்ள ஏனைய விலங்குகளும் தொழில் செய்யும் தேயிலை மலைகளில் நடமாடுவதாகவும் நேரில் கண்ட தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தங்களின் தொழிலை பயமின்றி செய்யமுடியாத நிலையில் இருப்பதாக இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் மலையக பகுதிகளில் சிறுத்தை புலி தாக்கி அதிகமான தோட்ட தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்தினரிடமும் அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்திலும் தெரிவித்துள்ளதாகவும் இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வன பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24