(இராஜதுரை ஹஷான்)
சட்டவாக்கத்துறை,நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய முத்துறைகளின் சாதகமான காரணிகளை உள்ளடக்கிய வகையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான யோசனையை புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.
மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினர் முன்வைத்த யோசனைகளை கருத்திற்கொண்டு அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளார்.
திருத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும் என பிரதமர் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்து செய்து அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை திருத்தங்களுடன் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்கி 19ஆவது திருத்தத்தின் சிறந்த விடயங்களை உள்ளடக்கிய வகையில் 21ஆவது திருத்தத்தை விரைவாக கொண்டு வர வேண்டும் என அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் ஊடாக தனது அதிகாரங்களை குறைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM