(என்.வீ.ஏ.)
சென்னை சுப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் ஞாயிறன்று கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் குஜராத் டைட்டன்ஸ் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்தில் இருக்கிறது.
வழமையான அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா, உபாதை காரணமாக இந்தப் போட்டியில் விளையாடாததுடன் அவருக்கு பதிலாக ராஷித் கான் அணித் தலைவராக செயற்பட்டார். சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் பாண்டியா இல்லாதது குஜராத் டைட்டன்ஸுக்கு பெரிய பாதிப்பாக அமையும் என கருதப்பட்டது.
ஆனால், டேவிட் மில்லர், ராஷித் கான் ஆகியோரது அதிரடி துடுப்பாட்டங்கள் போட்டியில் குஜராத்துக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.
170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப வீரர் ஷுப்மான் கில் (0), விஜெய் ஷங்கர் (0) ஆகிய இருவரும் முதல் 2 ஓவர்களில் ஆட்டமிழந்தமை குஜராத் டைட்டன்ஸுக்கு பேரிடியாக அமைந்தது.
அபிநவ் மனோஹரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் 12 ஓட்டங்களுடன் வெளியேறினார். (16 - 3 விக்.)
சாதிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கபப்பட்ட ஆரம்ப வீரர் ரிதிமான் சஹா (11), ராகுல் தெவாட்டியா (6) ஆகியோரும் ஆட்டம் இழக்க (87 - 5 விக்.) குஜராத் டைட்டன்ஸ் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
ஆனால், டேவிட் மில்லர், ராஷித் கான் ஆகிய இருவரும் துணிச்சலை வரவழைத்து ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி அணியை வெற்றி அடையச் செய்து சென்னைக்கு 5ஆவது தோல்வியைக் கொடுத்தனர்.
போட்டியின் 18ஆவது ஓவரில் கிறிஸ் ஜோர்டன் வீசிய ஓவரில் குவிக்கப்பட்ட 25 ஓட்டங்களே ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
டேவிட் மில்லர் 51 பந்துகளில் 8 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். ராஷித் கான் 21 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களைக் குவித்தார். இவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பந்துவீச்சில் ட்வேன் ப்ராவோ 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர் ரொபின் உத்தப்பா (3), மொயீன் அலி (1) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சென்னை சுப்பர் கிங்ஸ் 6ஆவது ஓவரில் 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து ருத்துராஜ் கய்க்வாட், அம்பாட்டி ராயுடு ஆகிய இருவரும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து சென்னை சுப்பர் கிங்ஸை நல்ல நிலையில் இட்டனர்.
அம்பாட்டி ராயுடு 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மொத்த எண்ணிக்கை 131 ஓட்டங்களாக இருந்தபோது ருட்டுராஜ் கய்க்வாடும் நடையைக் கட்டினார்.
48 பந்துகளை எதிர்கொண்ட ருட்டுராஜ் கய்க்வாட் 5 சிக்ஸ்கள், 5 பவுண்டறிகளுடன் 73 ஓட்டங்களைக் குவித்தார்.
ஷிவம் டுபே 19 ஓட்டங்களுடன் கடைசிப் பந்தில் ரன் அவுட் ஆனார். அணித் தலைவர் ரவிந்த்ர ஜடேஜா 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM