(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இவ்வாண்டுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
எவ்வாறிருப்பினும் இன்று முதல் பாடசாலை நேரத்தினை ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய கல்வி அமைச்சினால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்திற்கமைய சகல சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.
மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் காரணமாக விடுமுறை வழங்கப்படும்.
இதே வேளை முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட தவணை செயற்பாடுகள் ஜூன் மாதம் 6 ஆம் திகதி முதல் ஜூலை 8 ஆம் திகதி வரை இடம்பெறும்.
அத்தோடு ஜூலை 9 ஆம் திகதி முதல் ஜூலை 17 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.
மேலும் இவ்வாண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி செயற்பாடுகள் ஜூலை 18 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெறும்.
இவ்வாண்டுக்கான மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை இடம்பெறும்.
அதற்கமைய ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் காரணமாக விடுமுறை வழங்கப்படும்.
அத்தோடு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் நவம்பர் 14 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை இடம்பெறும்.
இதே போன்று நாடளாவிய ரீதியிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் இவ்வாண்டுக்கான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் மே மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறும்.
மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சைகள் காரணமாக விடுமுறை வழங்கப்படும்.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் ஜூன் 6 ஆம் திகதி முதல் ஜூலை 8 ஆம் திகதி வரை இடம்பெறும்.
முஸ்லிம் பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி செயற்பாடுகள் ஜூலை 18 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெறும்.
முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை இடம்பெறும்.
அதற்கமைய ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும். மூன்றாம் தவணையின் இரண்டாம்கட்ட கல்வி செயற்பாடுகள் ஒக்டோபர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை இடம்பெறும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM