உத்தேச 2.5 பில்லியன் டொலர் கடன் கோரிக்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை சீனா  முடிச்சிட்டுள்ளதா ?

16 Apr, 2022 | 08:42 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

சீனாவிடமிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை கடனாக கோரியுள்ளது. 

இந்த கோரிக்கைக்கு சாதகமான நகர்வுகள் பெய்ஜிங் காணப்படுவதாக அங்கிருக்கும் இலங்கை தூதுவர் பாலித கோஹண தெரிவித்துள்ளார். 

இந்த 2.5 பில்லியன் டொலரில் 1 பில்லியன் டொலரை சீனாவிடமிருந்து ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுக்கான ஜுலை மாத மீள் செலுத்தல் தொகைக்காக பயன்படுத்த உள்ளதுடன் எஞ்சிய 1.5 பில்லியன் டொலரை இலங்கை கடன் தொகையாக பெற்றுக்கொள்ளும் என கூறப்படுகின்றது.

 எவ்வாறாயினும் இந்த கடன் தொகை கிடைக்கைப்பெறும் கால வரையறை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

 அத்துடன் சர்வதேச கடன்களை மீள செலுத்துவதை மத்திய வங்கி உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தியுள்ளதால் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் குறித்தும் பல தரப்புகள் இலங்கையை எச்சரித்து வருகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாக தடைப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த  பேச்சுவார்த்தைகளை மீண்டும் சீனா ஆரம்பித்துள்ளது. 

இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இலங்கையுடனான தடைப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது கால சிறந்தது எனக் கூறி சீன தரப்புகள் நம்பிக்கையூட்டி வருகின்றன.

இலங்கையில் ஏற்கனவே துறைமுகங்கள், சர்வதேச விமான நிலையம், அனல் மின்நிலையம், பெருந்தெருக்கள் மற்றும் ஹோட்டல்கள் என பல்வேறு உட்கட்டமைப்பு கட்டுமானங்கள் சீனாவின் முதலீட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

ஆனால்  இந்த முதலீடுகள் நேரடி வர்த்தக - இருதரப்பு கொடுக்கல் வாங்கலாக இன்னும் முன்னேற்றம் அடையவில்லை.

மறுபுறம் இலங்கையின் முக்கிய இறக்குமதி மூலாதாரமாக உள்ள சீனா, இலங்கையின்  ஏற்றுமதிகளுக்கு  பாரியதொரு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை வைக்க இயலாது.  

மறுப்புறம் சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டால் அது இந்திய சந்தையைக் கடுமையாகப் பாதிக்கும்.  

சீனாவைப் பொருத்தவரையில் இலங்கையுடனான பொருளாதார உறவுகள் மூலம் அந்நாட்டிற்கு கிடைக்கும் அரசியல் நன்மைகளே அதிகமென பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுகின்றனர். 

அந்தவகையில், இதனை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தும் வகையில் சீனா மீண்டும் இரு தரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து கொழும்புடன் பேச்சுவார்த்தைகளை மிகவும் அமைதியான முறையில் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தேச 2.5 பில்லியன் டொலர் கடன் கோரிக்கையுடன் இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்த விவகாரத்தை பெய்ஜிங் முடிச்சிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது குறித்த  நகர்வுகளை மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், பல்வேறு இணக்கப்பாடுகளுடன்  இந்தியாவிடம் இலங்கை ஒத்துழைப்புகளை பெற்றுவருகின்றது. 

அண்மையில் மேலும் 2 பில்லியன் டொலரை இந்தியாவிடம் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இலங்கை தரப்புகள் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07