அமைச்சு பதவிகளிலிருந்து விலகியவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பு - எஸ்.பி.திஸாநாயக்க

Published By: Digital Desk 5

15 Apr, 2022 | 06:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கூட்டாக அமைச்சு பதவிகளில் இருந்து விலகியவர்களுக்கும், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (15.04.2022) மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையினை எதிர்வரும் வாரத்திற்குள் ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை பிரதான எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் அரசியல் மட்டத்திலான அடுத்தக்கட்ட நகர்வு குறித்து அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய சகல அமைச்சர்களும் கடந்த 3 ஆம் திகதி அமைச்சு பதவிகளை துறந்தோம்.

நாடு எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்கும் நோக்கம் எதிர்தரப்பினருக்கு கிடையாது. தற்போது நெருக்கடியினை தீவிரப்படுத்தி அதனூடாக அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் நிலையான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதியுடன் இன்று விசேட பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம். பாராளுமன்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு தான் தற்போதும் பெரும்பான்மை பலம் உள்ளது.

புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை கிடையாது. பெரும்பாலான உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையை எதிர்வரும் காலத்திற்குள் ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத மணல் அகழ்வுகளால் நிலக் கண்ணி...

2023-03-26 20:42:59
news-image

மட்டக்களப்பு வாவியொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

2023-03-26 20:40:31
news-image

கடல் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர்...

2023-03-26 20:39:51
news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26
news-image

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி...

2023-03-26 14:11:27