உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  பாதுகாப்புச் செயலரின் மற்றுமொரு நாடகம் ; நாம் முன்வைத்த 20 கேள்விகளுக்கும் பதிலளிக்கவும் - அருட் தந்தை சிறில் காமினி 

14 Apr, 2022 | 03:09 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ணவினால் வெளியிடப்பட்ட கருத்தானது மற்றுமொரு நாடகமாகும். 

இது சிறுப்பிள்ளைத் தனமான விடயமாகும் என  கத்தோலிக்கத் திருச்சபையின் ஞானர்த்த பிரதீப்பய பத்திரிகையின் ஆசிரியரான அருட்  தந்தை சிறில் காமினி அடிகள் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாபுச் செயலாளரான கமல் குணரட்ண பொதுமக்களின் வரி மூலம் சம்பளம் பெறும் அரச சேவையளர். பொது மக்களை பாதுகாப்பதே அவரின் வேலையே தவிர, அரசியல் தலைவர் அல்ல.  

கடந்த 12 ஆம்  திகதியன்று அவரின் தலைமையில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது,  பாதுகாப்புச் செயலாளரிடம் கத்தோலிக்க திருச்சபை  20 கேள்விகளை முன்வைத்துள்துடன், அந்த 20 கேள்விகளுக்குமான பதிலை கத்தோலிக்க திருச்சபை எதிர்பார்த்திருப்பதாகவும் அருட் தந்தை சிறில் காமினி குறிப்பிட்டார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

"உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும் இதுவரை குற்றவாளி யார் என்பதையும், அதற்கு பின்புலமாக யார் இருந்தார்கள் என்பதையும்  கண்டுபிடிப்பதற்கு பாதுகாப்புத் துறை தவறியுள்ளது.

உண்மையில், தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக வரிசைகளிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருவதால், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊடக சந்திப்புக்களை நடத்தாமல் இருந்து வந்தோம்.

எனினும், நாட்டின் பாதுகாப்புச் செயலாளரான கமல் குணரட்ண தலைமையில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரட்ண, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட  பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் ஜகத் டயஸ் ஆகி‍யோரின் பங்குபற்றுதலுடன் கடந்த செவ்வாயன்று (12) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பான  ஊடக சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.

இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அவரிடம் நாம் 20 கேள்விகளை முன்வைக்கிறோம்.  அவை தொடர்பில் தெளிவான பதிலை எமக்கு தருமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்"  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரேநேரத்தில் கற்க முயன்று...

2023-12-10 12:49:05
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32
news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07
news-image

உலக ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 12:14:23
news-image

கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக்...

2023-12-10 11:44:10
news-image

கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில்...

2023-12-10 11:16:12
news-image

நாடு முழுவதும் மின் துண்டிப்பு :...

2023-12-10 11:03:57
news-image

இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம்...

2023-12-10 11:08:10
news-image

செவ்வாயன்று இலங்கைக்கு மங்களகரமான செய்தி கிடைக்கும்...

2023-12-10 11:22:31
news-image

கொஸ்லந்தை - கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு...

2023-12-10 12:43:20
news-image

மஹாநாயக்க தேரரின் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம்...

2023-12-09 21:05:21