எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் மூலமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும் - ரோஷி 

14 Apr, 2022 | 03:02 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணடியுமாக இருப்பது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவதன் மூலமாகும். 

அதனால் அனைவரும் பேதங்களை புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட்டு அணிதிறண்டு தாய்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிக்க முன்வர வேண்டும் என கொழும்பு மாநகரசபை மேயர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாணவேண்டியதன் அவசியம் குறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடு எதிர்கொண்டுள்ள தீர்மானமிக்க இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைவரும் பேதங்களை புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட்டு அணிதிறண்டு தாய்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிக்கவேண்டும்.  

நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணடியுமாக இருப்பது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவதன் மூலமாகும். 

எதிர்க்கட்சிகள் அனைத்தும் பொதுவான இணக்கப்பாட்டுக்காக நம்பிக்கையுடன் கைகோர்த்துக்கொண்டு உறுதியான முன்னெடுப்பொன்றை பெற்றுக்கொண்டு முன்னுக்கு செல்வதா இல்லாவிட்டால் அச்சப்பட்டு, நெல் விதைப்பதுபோல் அங்கும் இங்குமாக செயற்படுவதா என அனைவரும் தற்போது தீர்மானிக்கவேண்டும். 

எதிர்க்கட்சியின் கடமையை நிறைவேற்றுவதற்கு பதிலாக மேலும் அரசியல் முகாம்களில் இருந்துகொண்டு செயற்படுவதா என்பதை தீர்மானிக்கவேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பது இரண்டு கட்சிகள் அல்ல. ஒரே குடும்பத்தில் இருந்து பிரிந்துசென்ற சகோதரர்கள் உடைய அரசியல் சக்தியாகும் என்பதை அந்த கட்சிகளின் தலைவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

 சந்தர்ப்பவாதம் மற்றும் தூரநோக்கற்ற அரசியல்வாதிகள் நாட்டின் தற்காலத்தை மாத்திரமல்லாது பிறக்காத வருங்கால சந்ததியைம் அவல நிலைக்கு தள்ளிவிட்டுள்ள, இவ்வாறான சந்தர்ப்பத்தில், எதிர்க்கட்சிக்கு இருக்கும் கைவிட முடியாத பொறுப்பை தட்டிக்கழிக்காமல் நிறைவேற்றவேண்டும்.

மேலும் உங்களை மக்கள் பிரதிநிதிகளாக நியமித்த மக்களை பட்டினியால் மரணிப்பதற்கு இடமளிப்பதா? இல்லாவிட்டால் அவர்களுக்காக கூட்டுப்பொறுப்புடன் அர்ப்பணிப்பதா என்ற தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் எடுக்கவேண்டும்.

அத்துடன் எதிர்காலத்தில் இலங்கை 7பில்லியன் டொலர்களை கடனாக செலுத்தவேண்டிய காரணத்தால் எமது நாடு மேலும்  பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22
news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02
news-image

மட்டக்களப்பில் குளங்கள் நிரம்பி வான் பாயும்...

2025-01-19 19:04:51
news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55
news-image

பன்னல வனப் பகுதியில் ஆண், பெண்...

2025-01-19 16:58:07