அனைத்து வாசகர்களுக்கும் வீரகேசரி இணையத்தளம் தமிழ் - சிங்கள புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
மிகவும் முக்கியமான பொருளாதார நெருக்கடிக்குள் எமது நாடு தள்ளப்பட்டுள்ள நிலையில் நாம் இந்த புதுவருடப் பிறப்பை கொண்டாட வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
நாட்டில் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் பல மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
நெருக்கடிகளை எதிர்நோக்கிய நாட்டு மக்கள், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவிவிலகுமாறு கோரி கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டத்தை இரவு பகலாக கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே இலங்கை மக்கள் புதுவருடப் பிறப்பை கொண்டாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையை எதிர்நோக்கிய நிலையிலேயே நாம் இம்முறை புத்தாண்டு வாழ்த்துக்களைத் எமது வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொறுமையும் நம்பிக்கையும் அவசியமான பொழுதொன்றில் மலரும் தமிழ், சிங்கள புத்தாண்டு அனைவரின் இடர்களையும், துயர்களையும் போக்குகின்ற ஆண்டாக அமைய வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
கொரோனா தொற்று, அந்நிய செலவாணி இழப்பு அதனுடன் தொடர்புபட்டு பொருளாதார நெருக்கடி எனப் பல காரணங்கள் இருந்தாலும் இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை கொள்வோம்.
தற்போதைய நெருக்கடிகள் தீரும். எரிபொருளுக்காகவும் எரிவாயுவிற்காகவும் பல மணிநேரங்கள் வரிசையில் காத்திருக்கும் காலம் விரைவில் மாறி மக்களின் போராட்டங்களுக்கு விரைவில் தீர்வு கிட்டி இலங்கை மக்களின் வாழ்வு வளம்பெறும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்தித்துக்கொள்வோம்.
இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவர வீரகேசரி இணையத்தளம் சார்பாக வாழ்த்துகிறோம்.
'சுபகிருது'' வருடப்பிறப்பு
எமது பாரம்பரிய 60 வருட சுற்றின் 36 வருஷமாகிய ''சுபகிருது'' எனும் நாமம் கொண்ட புதுவருஷம் இன்று 14.04.2022 வியாழக்கிழமை காலை 7 மணி 50 நிமிட நேரத்தில் மலர்கின்றது.
இதன் பிரகாரம் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி பூர்வ திரயோதசி திதி, பூரம் நட்சத்திரம் 4ஆம் பாதம் விருத்தி நாமயோகம், கெளலவகரணம் மேட லக்னம் தனு நவாம்சம் எனும் பஞ்சாங்க சுபசேர்க்கைகள் அமைகின்றன.
விஷு புண்ணியகாலம் 14.04.2022 அதிகாலை 3 மணி 50 நிமிடம் முதல் முற்பகல் 11 மணி 50 நிமிடம் வரை இப்புண்ணிய காலத்தில் விதிப்படி மனதார உங்கள் குலதெய்வ சுவாமிகளை வணங்கி மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து சிவப்பு அல்லது மஞ்சள் நிற புத்தாடை அணிந்து பவளம், புஷ்பராகம் இளைத்த ஆபரணம் தரித்து உங்கள் இல்லங்க ளில் சூரியனுக்கு பொங்கல் பொங்கி படைத்து வழிபாடு ஆற்றி விநாயகர் முதலான குல தெய்வ வழிபாடு செய்தல், பெரியோரை வணங்கி உற்றார், உறவினர்களுடன் அளவளாவி அறுசுவை உணவருந்தி புதிய வருஷ பலாபலன்களை கேட்டும் வாசித்தும் அறிந்து நற்சிந்தனையோடு இந்நாட்பொழதை கொள்ள வேண்டும்.
சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்
பரணி, மகம், பூரம், உத்தரம் 1ஆம் பாதம்,
பூராடம், உத்தராடம் 2,3, 4 ஆம் பாதம், திரு
வோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதம் இவர் கள் தவறாது மருத்து நீர் ஸ்நானம் செய்து இயன்ற தான தர்மம் செய்ய வேண்டும்.
கைவிஷேட நேரம்
14.04.2022 வியாழன் காலை 7.57 முதல் 8.47 வரை மற்றும் காலை 10.36 முதல் 11.56 வரை.
புதுவியாபாரம் புதுக்கணக்கு
14.04.2022 வியாழன் காலை 10.36 முதல் 11.56 வரை
15.04.2022 வெள்ளி காலை 8.36 முதல் 9.51 வரை
ராசிகளின் ஆதாய வியயம்
மேடம் – 14 வரவு 14 செலவு சமம்
இடபம் – 8 வரவு 8 செலவு சமம்
மிதுனம் – 11 வரவு 5 செலவு லாபம்
கடகம் – 11 வரவு 11 செலவு சமம்
சிங்கம் – 8 வரவு / 14 செலவு = நஷ்டம்
கன்னி – 11 வரவு / 5 செலவு = லாபம்
துலாம் – 8 வரவு / 8 செலவு = சமம்
விருட்சிகம் – 14 வரவு / 14 செலவு = சமம்
தனுசு – 2 வரவு / 8 செலவு = நஷ்டம்
மகரம் – 5 வரவு / 2 செலவு = லாபம்
கும்பம்– 5 வரவு / 2 செலவு = லாபம்
மீனம் – 2 வரவு / 8 செலவு = நஷ்டம்
குருப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM