(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்களால் கடுமையாக வெறுக்கப்படும் அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்று சாந்த பண்டார தனது அரசியல் வாழ்க்கையை தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தில் அமைச்சு, இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிடுவதற்கு நான் தெளிவற்றவனாக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளராக பதவி வகித்த சாந்த பண்டார முன்னெடுத்த அரசியல் தீர்மானம் கவலைக்குரியது.
மக்களினால் முழுமையாக வெறுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டு தனது அரசியல் வாழ்க்கையை சுயமாகவே கொலை செய்துள்ளார்.
எனக்கு அறிவித்ததன் பின்னர் தான் இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.
மக்களின் வெறுப்பை பெற்றுள்ள அரசாங்கத்தில் அமைச்சு,இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிடும் அளவிற்கு நான் தெளிவற்றவனாக இல்லை.
பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவின் மனநிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
இராஜாங்க அமைச்சு பதவியை பொறுப்பேற்க முன் எனக்கு அறிவித்திருந்தால் வாகனத்தை அனுப்பி அவரை வரவழைத்து சிறந்த முறையில் எடுத்துரைத்திருப்பேன்.
தவறான தீர்மானங்களின் போது பிறரை அதனுடன் இணைத்து விடுவதை அவர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM