(செய்திப்பிரிவு)
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த மூவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் மற்றையவர் இன்று திங்கட்கிழமையும் வரிசையில் காத்திருந்த நிலையில், உயிரிழந்துள்ளனர்.
தங்கொட்டுவ
தங்கொட்டுவ பிரதேசத்தில் எரிபொருள் கொள்வனவிற்காக வரிசையில் நின்ற பஸ் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். கோனவில பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்தநபர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார்.
காலி
காலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தவலமை இனிதும பிரதேசத்தில் எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதான காலி ஹபரகத பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
வென்னப்புவ
வென்னப்புவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வாய்க்காலை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிலையொமொன்றில் வரிசையில் நின்ற 51 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
தலுவகொட்டுவ கொச்சிகடை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் மாரடைப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தவரென தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM