logo

இடைக்கால அரசாங்கம் நீண்டகால தீர்வாக அமையாது - வீரசுமன வீரசிங்க

Published By: T Yuwaraj

10 Apr, 2022 | 09:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பொருளாதார மற்றும் அரசியல்   மீட்சிக்கு இடைக்கால அரசாங்கம் நீண்டகால தீர்வாக அமையாது.

இவ்வருடத்திற்குள் பொதுத்தேர்தலை நடத்துவது அத்தியாவசியமானது ஏனெனில் இடைக்கால அரசாங்கத்தை நாட்டு மக்கள் ஏற்கபோவதில்லை.

எமது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு பொதுத்தேர்தலை இலக்காக கொண்டதாக அமையும் என கம்யூனிச கட்சியின் பதில் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன  வீரசிங்க தெரிவித்தார்.

Articles Tagged Under: வீரசுமன வீரசிங்க | Virakesari.lk

இடைக்கால அரசாங்கம்  தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளார்கள்.

மக்களின் வெறுப்பை பெற்றுக்கொண்டதை தொடர்ந்தே 26 அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியுள்ளார்கள்.நாட்டின் நிதி நிலைமை சீராக அமைந்நிருந்தால்  பொதுத்தேர்தலை நடத்தியிருக்கலாம்.

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் பாரிய நெருக்கடி நிலைமை காணப்படுகின்ற பின்னணியில் பொதுத்தேர்தலை தற்போது நடத்துவது சாத்தியமற்றது.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளதை தொடர்ந்து அரசாங்கத்துடன் ஒன்றினைந்தவர்களை இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இடைக்கால அரசாங்கம் நீண்டகால தீர்வாக அமையாது.பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பில் தீவிரமடைந்துள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இடைக்கால அரசாங்கம் தற்காலிக தீர்வாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

இடைக்கால அரசாங்கத்தையும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.இவ்வருடத்திற்குள் பொதுத்தேர்தலை நடத்தும் சூழலை உருவாக்குவது எமது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளதால் எமது அடுத்தக்கட்ட நகர்வு பொதுத்தேர்தலை அடிப்படையாகக் கொண்டதாக அமையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27
news-image

19 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல்...

2023-06-10 14:59:32
news-image

மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும்...

2023-06-10 14:33:19
news-image

அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத் துறையின்...

2023-06-10 14:18:30
news-image

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி...

2023-06-10 14:19:25
news-image

கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு...

2023-06-10 13:26:16
news-image

'புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம்'...

2023-06-10 16:08:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கத்தின்...

2023-06-10 16:08:17