(இராஜதுரை ஹஷான்)
நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பொருளாதார மற்றும் அரசியல் மீட்சிக்கு இடைக்கால அரசாங்கம் நீண்டகால தீர்வாக அமையாது.
இவ்வருடத்திற்குள் பொதுத்தேர்தலை நடத்துவது அத்தியாவசியமானது ஏனெனில் இடைக்கால அரசாங்கத்தை நாட்டு மக்கள் ஏற்கபோவதில்லை.
எமது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு பொதுத்தேர்தலை இலக்காக கொண்டதாக அமையும் என கம்யூனிச கட்சியின் பதில் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளார்கள்.
மக்களின் வெறுப்பை பெற்றுக்கொண்டதை தொடர்ந்தே 26 அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியுள்ளார்கள்.நாட்டின் நிதி நிலைமை சீராக அமைந்நிருந்தால் பொதுத்தேர்தலை நடத்தியிருக்கலாம்.
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் பாரிய நெருக்கடி நிலைமை காணப்படுகின்ற பின்னணியில் பொதுத்தேர்தலை தற்போது நடத்துவது சாத்தியமற்றது.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளதை தொடர்ந்து அரசாங்கத்துடன் ஒன்றினைந்தவர்களை இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இடைக்கால அரசாங்கம் நீண்டகால தீர்வாக அமையாது.பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பில் தீவிரமடைந்துள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இடைக்கால அரசாங்கம் தற்காலிக தீர்வாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தையும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.இவ்வருடத்திற்குள் பொதுத்தேர்தலை நடத்தும் சூழலை உருவாக்குவது எமது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளதால் எமது அடுத்தக்கட்ட நகர்வு பொதுத்தேர்தலை அடிப்படையாகக் கொண்டதாக அமையும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM