(இராஜதுரை ஹஷான்)
இந்திய கடனுதவி திட்டம் நிறைவு பெற்றவுடன் அடுத்தக்கட்ட தீர்வு என்ன என்பது கேள்குறியான நிலையில் உள்ளது.
அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் கிடையாது. 19ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் எமக்கு ஆதரவு வழங்குவார்கள் என சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
![]()
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார நெருக்கடி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாக தீவிரமடைந்துள்ளது.சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண பாராளுமன்ற மட்டத்தில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக கடந்த நாட்களில் வாதபிரதிவாதங்கள் மாத்திரமே இடம்பெற்றன.
நாட்டில் தற்போது நிலவும் அமைதியற்ற நிலைமையை வரையறுக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கையிருப்பினை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டமும்,எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்விநியோக கட்டடைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமை சுற்றுலாத்துறையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கடனுதவி திட்டத்தினால் தற்போது எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ளப்படுகிறது.
இந்திய கடனுதவி திட்டம் எதிர்வரும் மாதத்துடன் நிறைவு பெறும் போது அடுத்தக்கட்ட தீர்வு என்ன என்பது குறித்து அரசாங்கத்திடம் கேள்விக்குறியான தன்மையே காணப்படுகிறது.
நாட்டின் ஸ்தீரத்தன்மை பேணப்பட்டால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தும் அளவிற்கு நாட்டின் நிதி நிலைமை சீராக இல்லை என்ற காரணத்தினால் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்து செய்யவும்,19ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வரவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும்.அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் தற்போது கிடையாது.19ஆவது திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM