(இராஜதுரை ஹஷான்)
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படமாட்டாது. நிர்ணய விலைக்கு மேலதிகமான எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் தரப்பினருக்கு எதிராக 1311 என்ற விசேட முறைப்பாட்டு இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யுமாறு லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த நாட்களை காட்டிலும் தற்போது லிட்ரோ நிறுவனம் நாளாந்தம் 1 இலட்சத்து 10 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கிறது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் காணப்பட்ட சிக்கல் நிலைமைக்கு உறுதியான தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் 3900 மெற்றிக்தொன் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதுடன்,எரிவாயு விநியோக நடவடிக்கைகள் தற்போது துரிதகரமான முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சமையல் எரிவாயுவின் விற்பனை விலை அதிகரிக்கப்படமாட்டாது.நிர்ணய விலைக்கு மேலதிக விலைக்கு சிலிண்டர்களை விற்பனை செய்யும் தரப்பினருக்கு எதிராக பொது மக்கள் பொலிஸில் முறையிடலாம் அல்லது 1311 என்ற விசேட முறைப்பாட்டு இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடளிக்கலாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM