(இராஜதுரை ஹஷான்)
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் ஜனநாயகம் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காணாவிடின் அரசாங்கத்தில் இருந்து மேலும் பலர் வெளியேறுவார்கள்.
அரசியல்வாதிகளை காட்டிலும் மக்கள் ஜனநாயகம், அரசியல் துறை தொடர்பில் தெளிவாக உள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் தற்போது காணப்படும் நிலைப்பாடு நியாயமானது. மக்களின் தேவைக்கமைய பதவி விலகிய அமைச்சரவை செயற்படவில்லை.
அரச நிர்வாக கட்டமைப்பிலும் பாரிய குறைப்பாடுகள் காணப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.
பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்ட மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் ஒன்றினைந்து வீதிக்கிறங்கியுள்ளார்கள்.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் ஜனநாயகம் மற்றும் தொழில்நுட்பம் ரீதியாகவும் தீரவு பெற்றுக்கொடுக்காவிடின் அரசாங்கத்திலிருந்து மேலும் பலர் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவார்கள்.
அரசாங்கத்திலிருந்து தொடர்ந்து பலர் வெளியேறுவது பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.
அரசியல்வாதிகளை காட்டிலும் நாட்டு மக்கள் ஜனநாயகம் மற்றும் அரசியல் கட்டமைப்பு குறித்து மிக தெளிவாக உள்ளார்கள்.
மக்களின் நியாயமான போராட்டத்தை வௌ;வேறு மாறுப்பட்ட பெயர்களை குறிப்பிட்டு ஒருபோதும் முடக்க முடியாது.போராட்டத்தை முடக்க மாற்று வழிமுறைகளை கையாண்டால் அது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM