கிண்ணியாவில்  மின் ஒழுக்கினால் வீடொன்று முற்றாக தீக்கிரை

Published By: Digital Desk 4

10 Apr, 2022 | 10:32 AM
image

கிண்ணியா - ஆலங்கேணி பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது

இச்சம்வம் இரவு 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா,ஆலங்கேணி,வள்ளுவர் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

திருமணம் முடிந்து நான்கு நாட்களான புதுப்மணத் தம்பதியினர் தமது (ஆலங்கேணி) வீட்டை விட்டு, மாமியார் வீடான மட்டக்களப்புக்குச் சென்றுள்ள அவ்வீட்டில் யாரும் இல்லாத போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அனைவரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவந்துள்ளனர்.

திருமணத்துக்கு , வாடகைக்கு எடுத்த தளபாடங்கள், பிளாஸ்டிக் கதிரைகள், மின்சார உபகரணங்கள், முதலான அனைத்து பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன. 

அன்றைய தினம் மின் ஒழுக்கு ஏற்பட்டு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். பல இலட்சம் ரூபாய்ப் பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மின்சார ஒழுக்கு ஏற்பட்டு வீடு எரிந்த வேளையில் இலங்கை மின்சார சபை கிண்ணியா அலுவலகத்துக்கும் , கிண்ணியா பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பெறுமதிமிக்க பொருட்கள் அழிந்துவிட்டது. அரசாங்கம் நஷ்டயீடு வழங்க வேண்டும் என வீட்டு உரிமையாளர்கள் உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-24 06:37:57
news-image

வாக்குகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பொய்யான...

2025-03-24 03:22:42
news-image

நாடளாவிய ரீதியில் 3 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 03:16:05
news-image

சர்வதேசத்தின் மத்தியில் பாதுகாப்பு படையினரை காட்டிக்...

2025-03-24 03:09:11
news-image

சீனாவின் K-18 விமானங்களை பரிசோதனை செய்கிறது...

2025-03-24 03:04:35
news-image

ஐ.தே.க. உறுப்பினர்களுடன் இணைந்து சபைகளை நிறுவுவோம்...

2025-03-24 03:02:35
news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20