(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலககும் வரை ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (8 )நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் தற்போது பணவீக்கம் 20 சதவீதமாகக் காணப்படுகிறது, எதிர்வரும் 6 மாதங்களுக்குள் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் , இது 56 சதவீதம் வரை உயர்வடையக் கூடும் என்று சர்வதேச பொருளாதார நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
அது மாத்திரமின்றி பணவீக்கம் அதிமாகக் காணப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை 6 ஆவது இடத்தை பிடிக்கக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைய ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதை தொடர்ச்சியாக தெரிவித்து வந்தார்.
டொலரின் பெறுமதியை 200 ரூபாவாகப் பேணுவதற்காக மத்திய வங்கி வசம் காணப்பட்ட சுமார் 5 பில்லியன் டொலரை சந்தைக்கு விடுவித்தார்.
8 பில்லியன் டொலர் இருப்பினை பாதுகாத்திருந்தால் நாட்டில் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட இந்த நெருக்கடிகளுக்கான பொறுப்பை அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஜனாதிபதி உணர வேண்டும் ஆனால், ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ இதனைப் புரிந்து கொள்வதற்கு தயாராக இல்லை.
இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு தேசிய மக்கள் சக்தி என்ற அடிப்படையில் தீக்கமானதொரு வேலை திட்டத்தினை முன்வைப்போம். ஜனாதிபதியும் , அரசாங்கமும் பதவி விலகிய பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
அதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் புதிய ஆட்சி அமைக்கப்படும் வரையில் இடைக்கால நிர்வாகத்திற்கான யோசனைகள் அனைத்து தரப்பினரிடமிருந்தும் கோரப்படும்.
இதனை செய்வதற்கு ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும்.
அவர்கள் பதவி விலகும் வரை தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
இதற்காக பொது மக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு தேசிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM