பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை தாக்கி, அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று தெரிவித்து சமூகவலைத்தளங்களில் காணொளியை வெளியிட்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 36 வயதான தலாவை நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் , பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிப்படுத்தப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :
மேற் குறிப்பிடப்பட்ட சந்தேகநபர் கடந்த 6 வருடகாலமாக போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதோடு , அவரது பெற்றோரால் மனநல சிகிச்சை பெறுவதற்காக கராப்பிட்டிய மற்றும் முல்லேரியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் , முழுமையான சிகிச்சையைப் பெறாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் பிறிதொரு குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு கதிர்காமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் அங்குணுகொலபெலஸ்ஸ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு , அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் சிகிச்சைகளுக்காக அவர் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இவர் பல சந்தர்ப்பங்களில் பௌத்த மதகுமார்களைப் போன்ற ஆடையணிந்து பல இடங்களுக்குச் சென்றுள்ளார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. நாகொட பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM