(குடந்தையான்)
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று பத்து மாதங்கள் கடந்த நிலையில் முதன்முதலாக அவர் அரசு சார்பில் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தை அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கடுமையாக எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக பா.ஜ.க.வின் தமிழக மாநிலத் தலைவரான அண்ணாமலை, கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
இதுதொடர்பான விவாதங்களே தற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின், அரசு அதிகாரிகள் என்று பத்திற்கும் மேற்பட்டவர்கள் கொண்ட தமிழக குழுவினர், அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படுவதிலிருந்து, டுபாய் விமான நிலையத்தில் இறங்கும் வரையில் மட்டுமல்லாமல், அங்கு நடைபெற்ற வர்த்தக கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றியமையானது அனைத்துலக தமிழர்கள் மற்றும் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அத்துடன் அங்கு பல்வேறு தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்.
அதன் பிறகு தமிழகம் திரும்பியவுடன் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், 'ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் மூலம் தமிழகத்தில் 6100 கோடி ரூபாக்கான முதலீடுகளை பெற்றுள்ளோம்.
இதன்மூலம் தமிழகத்திலுள்ள பதினையாயிரம் இளைஞர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும், ஆகவே எனது முதலாவது வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது' என்றார்.
எனினும், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'முதல்வர் ஸ்டாலினின் அரசுமுறைப் பயணத்தை அரசு செலவிலான குடும்ப பயணமாக மேற்கொண்டார்' என்று விமர்சித்துள்ளார்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-04-03#page-28
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM