logo

இடைக்கால அரசாங்கம் என்ற ஏமாற்று செயற்பாட்டையும் மக்கள் எதிர்க்க வேண்டும் - குமார வெல்கம

Published By: T Yuwaraj

04 Apr, 2022 | 10:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆட்சியதிகாரத்தை வழங்க வேண்டாம் என  நாட்டு மக்களிடம் 2019ஆம் ஆண்டே குறிப்பிட்டேன்.

எனது ஆரூடம் தற்போது உண்மையாகியுள்ளது. நாட்டு மக்கள் கோ ஹோம் கோட்டா என்ற எதிர்ப்பு பதத்துடன் கோ ஹோம் ராஜபக்ஷ என்ற பதத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

இடைக்கால அரசாங்கம் என்ற ஏமாற்று செயற்பாட்டையும் மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

Articles Tagged Under: குமார வெல்கம | Virakesari.lk

களுத்துறை பகுதியில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டுக்காக பொது மக்கள் ஒன்றினைந்து வீதிக்கிறங்கியுள்ளமை மகிழ்வுக்குரியது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆட்சியதிகாரத்தை வழங்க வேண்டாம் என நான் 2019ஆம் ஆண்டு நாட்டு மக்களிடம் குறிப்பிட்டேன்.எனது ஆருடம் தற்போது உண்மையாகியுள்ளது.

பிரதேச சபை உறுப்பினர் பதவியை கூட வகிக்காதவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது.ஆகவே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள் என நான் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டேன்.

குடும்ப அரசியலை ஸ்தாபித்துக்கொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியல் மற்றும் பொது நிர்வாகம் தொடர்பில் எவ்வித அனுபவமில்லாதவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினார். அவர் செய்த தவறின் பிரதிபலனை தற்போது முழு நாடும் எதிர்க்கொள்கிறது.

நாட்டு மக்கள் கோ ஹோம் கோத்தா என்ற எதிர்ப்பு சொற்பதத்துடன் ,கோ ஹோம் ராஜபக்ஷ என்ற பதத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.குடும்ப ஆட்சி எவ்விதத்திலும் என்றாவது பாதிப்பை ஏற்படுத்தும்.

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்;டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கின்றமை நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும்.ஆகவே நாட்டு மக்கள் இதற்கு ஒருபோதும் ஏமாற கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் தொடர்பில் குடிவரவு...

2023-06-08 06:24:12
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை பலப்படுத்த...

2023-06-07 21:57:30
news-image

ஊடகத்துறையை முடக்கி ஊழலை இல்லாதொழிக்க முடியாது...

2023-06-07 21:20:37
news-image

சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் ...

2023-06-07 20:38:39
news-image

தொழில் முயற்சியாளர்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை...

2023-06-07 21:03:33
news-image

கைத்தொழிலாளர்களின் கடன் தவணைகளை செலுத்த சட்ட...

2023-06-07 21:17:50
news-image

பொருளாதார பாதிப்புக்கு கடந்த அரசாங்கம் மற்றும்...

2023-06-07 21:02:43
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு ஒரு சட்டம் :...

2023-06-07 21:34:13
news-image

பரீட்சை மண்டபத்துக்கு ஓடியது யார் ?...

2023-06-07 21:32:19
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைதுசெய்தமுறை தவறானது -...

2023-06-07 21:26:44
news-image

தென்னிலங்கை வாக்குகளுக்காகவே கஜேந்திரக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்...

2023-06-07 21:24:37
news-image

வெகுவிரைவில் வரிசை யுகம் மீண்டும் தோற்றம்...

2023-06-07 21:15:26