வத்தளை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றை கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று முதலாம் திகதி வெள்ளிக்கிழமை வத்தளை - எலகந்தை பிரதேசத்தில் பொலிஸாரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 24 வயதான ரொசெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
குறித்த நபர் செலுத்திய முச்சக்கரவண்டியை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியதுடன் மேலதிக விசாரணைகளில் குறித்த முச்சக்கரவண்டி சந்தேகநபரால் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர் இன்று வெலிசரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM