logo

பாராளுமன்றத்தை கலைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் - விமல் வீரவன்ச ஆலோசனை

Published By: T Yuwaraj

01 Apr, 2022 | 07:05 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை முழுமையாக குறைவடைந்துள்ளது. நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் ஜனாதிபதி அமைச்சரவையினை கலைத்து பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் காபந்து அரசாங்கம் (இடைக்கால அரசாங்கம்)ஸ்தாபிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் விஜயத்தை எதிர்க்க மக்கள் அணிதிரள வேண்டும் : விமல்  | Virakesari.lk

என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தால் மக்களின் போராட்டம் எவ்வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிக்கும் போது அரசாங்கத்திடம் தொடர்ந்து எடுத்துரைத்தோம்.எமது கருத்துக்கு அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை தற்போது அனுபவிக்கிறது.

பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.மக்களாணைக்கு மதிப்பளித்து அரசாங்கம் செயற்படவில்லை.வரலாற்றில் என்றுமில்லாத வகையில் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பி;ல் பாதிப்பினை எதிர்க்கொண்டுள்ளோம்.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை முழுமையாக இல்லாதொழிந்துள்ளது.தற்போதைய நிலையில் தேர்தல் ஒன்றை நடத்தும் பொருளாதார நிலையில் நாடு இல்லாத காரணத்தினால் ஜனாதிபதி பயனற்ற அமைச்சரவையினை விரைவாக கலைத்து பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து காபந்து அதாவது இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கம் மாத்திரமல்ல முழு நாடும் அழிவை நோக்கி செல்ல வேண்டும்.மக்களின் கருத்துக்கு அரசாங்கம் மதிப்பளிக்காவிடின் தோற்றம் பெறும் விளைவுகளை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லிணக்கத்திற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சட்டம்...

2023-06-09 21:41:14
news-image

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது...

2023-06-09 21:33:40
news-image

கொவிட் - 19 மற்றும் டெங்கு...

2023-06-09 21:27:47
news-image

நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும் -...

2023-06-09 20:42:16
news-image

குரங்குகளை பயங்கரவாதிகளாக கருத வேண்டும் -...

2023-06-09 20:12:04
news-image

வவுனியாவில் கைதான பாலியல் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய்...

2023-06-09 20:27:48
news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு 44...

2023-06-09 20:03:54
news-image

சீன சேதன பசளை கொள்வனவு தொடர்பான...

2023-06-09 19:57:17
news-image

நான் வாக்கு வேட்டைக்காக அரசியல் நடத்தவில்லை...

2023-06-09 20:45:38
news-image

வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் தடை ஏற்படுத்துபவர்களை...

2023-06-09 16:39:43
news-image

யாழ். மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு...

2023-06-09 17:02:51
news-image

வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரத்தை உருவாக்கிய...

2023-06-09 16:12:21