(இராஜதுரை ஹஷான்)
நாடு தழுவிய ரீதியின் நாளைய தினம் சுழற்சி முறையில் 08 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களும் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும். மின்சார சபை முன்வைக்கும் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டதை தொடர்ந்தே மின்விநியோக தடை அமுலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்விநியோக தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைக்கும் யோசனைகள் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டதை தொடர்ந்து மின்விநியோக தடைக்கு அனுமதி வழங்கிறது. மின்விநியோக பிரச்சினைக்கு விரைவில் சிறந்த தீர்வை முன்னெடுக்குமாறு தொடர்ந்து அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகிறோம் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.
நாளைய தினம் 8 மணித்தியாலங்களும் ,30 நிமிடங்களும் நாடு தழுவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும்.அதற்கமைய ஆங்கில எழுத்தில் A தொடக்கம் F வரையிலான வலயங்களில் உள்ளடங்கும் பிரதேசங்களில் காலை 08 மணிமுதல் பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும்,மாலை 4 மணிமுதல் இரவு 7மணி வரை மணித்தியாலங்களும்,இரவு 9 மணிமுதல் இரவு 10.30 மணி வரை ஒன்றரை மணித்தியாலங்களும் மின்விநியோகம் தடை செய்யப்படும்.
அத்துடன் ஆங்கில எழுத்தில் G தொடக்கம் L வரையிலான வலயங்களில் உள்ளடங்கும் பிரதேசங்களில் பகல் 12 மணிமுதல் மாலை 4மணி வரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை 3 மணித்தியாலங்களும்,இரவு 10.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை ஒன்றரை மணித்தியாலங்களும் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும்.
ஆங்கில எழுத்தில் P தொடக்கம் S வரையிலான வலயங்களில் உள்ளடங்கும் பிரதேசங்களில் காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும்,மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரை 3 மணித்தியாலங்களும்,இரவு 9 மணிமுதல் இரவு 10.30- மணி வரை ஒன்றரை மணித்தியாலங்களும் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும்.
அத்தடன் ஆங்கில எழுத்தில் T தொடக்கம் W வரையிலான வலயங்களில் உள்ளடங்கும் பிரதேசங்களில் இரவு 10.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும், மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM