(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் மறுக்கவில்லை. எதிர்க்கட்சியினரது சிறந்த ஆலோசனைகளை பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தயாராகவுள்ளோம்.
அரசியல் செய்யும் தருணம் இதுவல்ல அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அனைத்து தரப்பினரது ஆலோசனைகளையும் ஒருமுகப்படுத்தும் வகையில் கூட்டப்பட்ட சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்த அரசியல் கட்சிகள் மீண்டும் சர்வக்கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார்.
ஆலரிமாளிகையிவ் அலரிமாளிகையில் புதன்கிழமை (30) இடம்பெற்ற 'நீர்பாசன சுபீட்சம்'செயற்திட்டத்தின் கீழ் 5000ஆயிரம் குளங்கள் மற்றும் கால்வாய்களை மறுசீரமைக்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை மெய்நிகர் முறைமை ஊடாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் மேலும் குறிப்பிட்;டதாவது,
கொவிட் -19 பெருந்தொற்று மற்றும் அதன் பின்னரான காலப்பகுதியில் தோற்றம் பெற்றுள்ள பொருளாதார சவால்களுக்கு முகம் கொடுத்து நெருக்கடியானதொரு சூழ்நிலையினை எதிர்க்கொண்டுள்ளோம்.
தேசிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்திய பொருளாதாரம் அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக காணப்படுகிறது.
தற்போதைய நிலைமையில் பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளோம்.சவால்களை சிறந்த முறையில் வெற்றிக்கொண்டால் சிறந்த எதிர்காலத்தை எம்மால் உருவாக்க முடியும்.
நீர்பாசனத்துறை முன்னேற்றமடைந்தால் விவசாயத்துறையும்,நன்னீர் மீன்பிடி கைத்தொழில் உட்பட விவசாயத்துறையுடன் ஒன்றினைந்த ஏனைய கைத்தொழில் துறைகள் முன்னேற்றமடையும்.கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும்.
நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை நன்கு அறிவோம்.மக்களின் துயரத்தை நாங்கள் அறியவில்லையா என ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள்.
நாடும்,நாட்டு மக்களும் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே சர்வ கட்சி மாநாட்டை நடத்தி அனைத்து தரப்பினரது ஆலோசனைகளையும் ஒன்றினைத்து ஒரு தீர்மானத்தை செயற்படுத்தவுள்ளோம்.
கொவிட் -19 வைரஸ் தொற்று பரவலை அரசாங்கம் உருவாக்கவில்லை.அரசாங்கம் தான் கொவிட் பரவலை தீவிரப்படுத்தியுள்ளது என ஒருசிலர் குறிப்பிடுவதை அவதானித்துள்ளேன்.எதிர்க்கட்சியின் சிறந்த ஆலோசனைகளை பெற்று நாடு என்ற ரீதியில் முன்னோக்கி செல்ல தயாராகவுள்ளோம்.
அரசியல் செய்யும் தருணம் இதுவல்ல நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.
சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்த அரசியல் கட்சிகள் சர்வக்கட்சி மாநாட்டில் இரண்டாவது முறையாக கலந்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளேன்.
புத்தாண்டு காலம் நெருங்கியுள்ளது ஒரு சிலர் நடப்பு உண்மை நிலவரத்தை அறிந்துக்கொண்டு இன்று அல்லது நாளை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும், உணவு தட்டுப்பாடு ஏற்படும் என மக்களை தவறான முறையில் வழிநடத்தும் வகையில் போலியான கருத்துக்களை குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.
தவறான பிரசாரங்கள் சமூக கட்டமைப்பில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு மூல காரணியாக உள்ளது.
நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் மறுக்கவில்லை.மக்களுக்க நிவாரணம் வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM