பெல்மடுல்ல, பஹல அமுன, உடத்துல பிரதேசத்தில் உள்ள கிரிந்தி எல்ல பகுதியில் இருந்து 16 வயது சிறுவனின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யாத குறித்த சிறுவனுடன் சென்ற மூன்று பாடசாலை மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த சடலம் பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 16 வயதுடைய மாணவனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் கடந்த சனிக்கிழமை (26) பெல்மடுல்ல லெலுப்பிட்டிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மறுநாள் (27) அவர் வீடு திரும்பாததால், சிறுவனின் பெற்றோர் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறுவனின் சடலத்தை கண்டுபிடித்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த சிறுவன் மேலும் மூன்று நண்பர்களுடன் கிரிந்தி எல்ல நீர்வீழ்ச்சிக்கு குளிக்கச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குளித்துக் கொண்டிருந்த போது குறித்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் சம்பவம் குறித்து யாருக்கும் தெரிவிக்காமல் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.
நீரில் மூழ்கி இறந்ததை தெரிவிக்காததால், அப்பகுதியை விட்டு வெளியேறியதற்காக குறித்த மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து உயிரிழந்தவரின் சடலம் கஹவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM