மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இடைநிறுத்தப்பட்ட சத்திர சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராதெனிய போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் எச்.எம்.அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.
அவசர மற்றும் உயிர்காக்கும் சத்திரசிகிச்சைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை சேமிக்கும் நோக்கில் நேற்று (28) முதல் இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் எச்.எம்.அர்ஜுன திலகரத்ன தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சத்திரசிகிச்சைகளை வழமை போன்று தொடர்வதற்கு உரிய மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை வழங்குவதாக மருத்து விநியோகப் பிரிவினால் எமக்கு அறிவித்தல் கிடைத்துள்ளது.
அதன்படி, பற்றாக்குறை நிவர்த்திசெய்யப்பட்டு வருகிறது மற்றும் அனைத்து அறுவை சிகிச்சைகளும் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் திலகரத்ன தெரிவித்துள்ளார்.
பேராதனை போதானா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட செய்தியை அறிந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இவ்விடயத்தில் இந்தியா எவ்வாறு உதவலாம் என்பது குறித்து கலந்துரையாடுமாறு இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லேவை கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM