(கபில்)
“தமிழர்களைப் பொறுத்தவரையில் பொருளாதாரத் தடை ஒரு பொருட்டும் அல்ல. அதற்குள் வாழுவது கடினமும் அல்ல. ஆனால் சிங்கள மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்”
“பிரபாகரனின் செவ்வியில் கூறப்பட்டுள்ளது போல சந்தோசமாக பிரிந்து செல்வதா, சம்பந்தன் குறிப்பிட்டது போன்று தமிழரின் இறைமையை அங்கீகரிக்கும் அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதா என்ற இணக்கமான நிலைக்கு சிங்கள மக்களும் அரசாங்கமும் முதலில் தயாராக வேண்டும்”
2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், செவ்வி ஒன்றில் வெளியிட்ட கருத்தின் ஒரு சிறுதுண்டு காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
“தங்களுக்கு சம்பந்தமேயில்லாத இடங்களில் வந்து அவர்கள் வீணாகச் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் இதனால், இரண்டு தரப்பினருக்கும் தான் அழிவு.
இரண்டு பேருமே சந்தோசமாக பிரிந்து போனால், இருவருமே நன்றாக இருக்கலாம்.
சிங்கள மக்களுக்கு நான் எதிரியல்ல. அவர்கள் மீது கோபமும் இல்லை. அவர்களின் தவறால் அழிவுகள் தொடருகின்றன” என்பதே அந்தச் செவ்வியின் மையக் கருத்து.
போர் முடிந்து 13 ஆண்டுகளாகி விட்டன ஆனால், அப்போது இருந்த பிரச்சினைகள் இப்போதும் உள்ளன.
சிங்கள மக்கள் மாறவில்லை. அரசாங்கங்களும் தமது பிடிவாதப்போக்கில் இருந்து மாறவில்லை.
போர் இல்லாவிட்டாலும், இனவாதம் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது. தமிழருக்கு எதிரான வன்மமும், குரோதமும் தொடருகின்ற நிலையில், நாடு இன்றைக்கும் சீரழிந்து கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை கூட்டிய சர்வகட்சி கூட்டத்தில் இரா.சம்பந்தன் உரையாற்றிய போது, “30 வருடங்களாக நீடித்த உள்நாட்டுப் போர் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் போர் ஒரு தீவிர சமூகப் பிரச்சினையால் ஏற்பட்டது. ஒரு சமூகத்தின் இறைமை பற்றிய பிரச்சினை அது.
அந்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் நாட்டில் உள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரப்பகிர்வு தேவை என்றும், தமிழ் மக்களுக்கு நீதியும் சமத்துவமும் கிடைக்க வேண்டும் என்றும் அதன் மூலமே பொருளாதாரப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழ் மக்களுடன் இணங்கி வாழும் சூழலை ஏற்படுத்தி, அவர்களின் பிரச்சினையை தீர்த்து, அமைதியான நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான மறுசீரமைப்புகள் மாற்றங்களுக்கு சிங்கள மக்களும், அரசாங்கமும் தயாராக இல்லாத வரை, பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதே அவரது நிலைப்பாடு.
போருக்காக – தமிழர்களை அழிப்பதற்காக, வளங்களைக் கொட்டத் தொடங்கியதன் விளைவு தான், நாடு இன்று அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-27#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM