ரணிலின் வலியுறுத்தலுக்கு இணங்கியது அரசாங்கம்

27 Mar, 2022 | 06:50 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்குவதற்கு தயார் என ஆளும் கட்சி பிரதமகொறட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படும் எதிர்க்கட்சிகள் பல இதுதொடர்பாக பாராளுமன்ற விவாதம் ஒன்று தேவை என தெரிவித்திருந்தமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிக்கையில்,

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு கடந்த சில தினங்களாக ரணில் விக்ரமசிங்க உட்பட பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரி இருந்தன. 

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அறிக்கையை நேற்று  வெளியிட்டிருக்கின்றது. 

அதன் பிரகாரம் குறித்த அறிக்கை தொடர்பாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அடுத்த பாராளுமன்ற வாரத்தில் அந்த விவாதத்தை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம். அடுத்த பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கடந்த வாரம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

என்றாலும் சர்வதே தேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை அடுத்த வாரம் நடத்துவதாக இருந்தால் அதுதொடர்பில் கலந்துரையாடி, அதற்காக நேரம் ஒதுக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை வெளிவந்த பின்னர் அதுதொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்று தேவை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பியூலன்ஸ் வண்டி - டிப்பர் வாகனம்...

2025-01-21 16:31:59
news-image

ஹிக்கடுவையில் போதைப்பொருள், தோட்டாக்களுடன் நடனக் கலைஞர்...

2025-01-21 16:05:58
news-image

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் 06...

2025-01-21 15:53:35
news-image

03 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன்...

2025-01-21 15:45:04
news-image

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து...

2025-01-21 15:46:28
news-image

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வரை பயங்கரவாத...

2025-01-21 15:22:45
news-image

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம்...

2025-01-21 15:30:13
news-image

யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றம்...

2025-01-21 15:19:24
news-image

அர்ச்சுனா எம்பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

2025-01-21 15:18:46
news-image

19 நாட்களில் ஒரு இலட்சத்து 50...

2025-01-21 14:25:01
news-image

வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படை...

2025-01-21 14:36:14
news-image

பலத்த மழையினால் புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில்...

2025-01-21 14:05:01