( எம்.எப்.ம்.பஸீர்)
பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில், பலகாரங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பலகார உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூலப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இம்முறை பண்டிகைக் காலத்தில், பழைய விலையில் பலகாரங்களை வழங்கக முடியாது எனவும் புதிய விலைகளின் அடிப்படையிலேயே இம்முறை ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் உற்பத்தியளர்கள் தெரிவிக்கின்றனர்.
பலகார உற்பத்திக்கான அரிசி, சீனி, பயறு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள உற்பத்தியாளர்கள், பலகாரத்தின் விலையை அதிகரித்துள்ளதாக கூறினர்.
அதன்படி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பலகாரம் குறைந்த பட்சம் 30 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
25 ரூபாவாக விற்கப்படும் கொண்டை பலகாரம் ரூ.50 இற்கும், 35 முதல் 40 ரூபாவை விற்பனைச் செய்யப்பட்ட பயிற்றம் பலகாரம் 55 ரூபாவுக்கும், 30 ரூபா வரை விற்கப்பட்ட தேன் குழல் 40 முதல் 50 ரூபாவுக்கும், 15 ரூபாவுக்கு விற்கப்பட்ட கொக்கிஸ் 30 ரூபாவுக்கும், 60 ரூபாவாக இருந்த ஆஸ்மி 100 ரூபாவுக்கும் விற்கும் வண்ணம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த விலையானது குறைந்த பட்ச விலையதிகரிப்பு என சுட்டிக்காட்டும் பலகார உற்பத்தியாளர்கள், பண்டிகை நெருங்கும் போது இவ்விலைகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டனர்.
இதனை விட தற்போதும் தொதல் ஒரு கிலோவின் விலை 700 ரூபா முதல் 1000 ரூபா வரை உயர்ந்துள்ளது.
இந் நிலையில் இம்முறை பண்டிகைக் காலத்தில் பலகாரங்களுக்கான கேள்வி விலை அதிகரிப்பு காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பலகார உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM