(ஆர்.ராம்)
வடக்கு, கிழக்கில் படையினரால் காணிகள் அபகரிக்கப்படுதல் நிறுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது.
இதனையடுத்து இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுடன் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார்.
இதன்போது, ஜனாதிபதியிடத்தில் படையினர் காணிகளை அபகரிப்பதாக கூறியிருக்கின்றீர்கள்.
படையினர் காணிகளை அபகரிக்கவில்லை என்ற தொனிப்பட இராணுவத்தளதி சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார்.
எனினும், சுமந்திரன் எம்.பி., வடக்கிலும் கிழக்கிலும் படையினரால் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள சில இடங்களையும் அபகரிக்க முயன்றபோது பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தப்பட்ட நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்பின்னர், அபகரிக்கப்பட்ட காணிகளின் தகவல்களையும் தரவுகளையும் வழங்குமாறு இராணுவத்தளபதி சுமந்திரனிடத்தில் கோரியுள்ளார்.
எனினும், தன்னிடத்தில் யாழ்.மாவட்டத்தின் தகவல்களும் தரவுகளும் முழுமையாக உள்ளதோடு ஏனைய மாவட்டங்களின் தகவல்களையும் தரவுகளையும் பெற்ற பின்னர் வழங்குகின்றேன் என்று பதிலளித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM