முச்சக்கரவண்டி விபத்தில் சிறுமி பலி : மூவர் காயம்

26 Mar, 2022 | 12:56 PM
image

பதுளை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை (26) பதுளை அம்பகஸ்தோவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடலிந்த பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பயணித்த குறித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார் .

இதேவேளை படுகாயமடைந்தவர்களில் ஒரு சிறுவன் உட்பட இரண்டு சிறுமிகள் அம்பகஸ்தோவ மற்றும் பரணகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அம்பகஸ்தோவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்: ஒரு ஏக்கர்...

2026-03-16 14:13:58
news-image

சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்தினால் கிவ்.ஆர் முறைமை...

2026-03-16 14:40:34
news-image

அனைத்து மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்கும் சூழலை...

2026-03-16 13:51:53
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-16 14:16:20
news-image

நாட்டை வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

2026-03-16 13:38:22
news-image

ஊழல் குற்றச்சாட்டு: சஜின் வாஸ் குணவர்தனவுக்கு...

2026-03-16 14:11:42
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணத் தொகுதி ஒன்று...

2026-03-16 14:14:40
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு...

2026-03-16 12:28:59
news-image

சித்திரை புத்தாண்டு: சர்ச்சை முடிவுக்கு வந்தது;...

2026-03-16 12:59:01
news-image

நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில்...

2026-03-16 12:53:47
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் :...

2026-03-16 12:34:37
news-image

போலி எரிபொருள் அனுமதிபத்திர இணையத்தளம்; பொதுமக்களுக்கு...

2026-03-16 12:32:45