(நா.தனுஜா)
அரச வங்கிகள் மிகவும் சுமுகமான முறையில் இயங்கிவருவதாகவும் நாட்டின் வங்கிக்கட்டமைப்பு ஸ்திரமான நிலையில் இருப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
டொலருக்கான பற்றாக்குறை, பொருட்களின் விலையேற்றம், அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு உள்ளடங்கலாக அண்மையகாலங்களில் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் வங்கிச்செயற்பாடுகள் முழுமையாகப் பாதிப்படையக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
அதேவேளை இன்றையதினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அரச வங்கியொன்று வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாகவும் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் வங்கிக்கட்டமைப்புக்களின் ஸ்திரத்தன்மை குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
'நாட்டின் வங்கிக்கட்டமைப்பு வலுவான நிலையில் இருப்பதுடன், அரச வங்கிகளின் செயற்பாடுகள் மிகவும் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்பதை பொதுமக்களுக்கும் தொடர்புடைய ஏனைய தரப்பினருக்கும் உறுதிப்படுத்துகின்றோம்' என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM