( எம்.நியூட்டன் )
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் பொலிசாரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை விரைவில் ஆரம்பிக்கப்பட்டவுள்ள நிலையில், தற்போது அதற்கான முன்னாயத்தங்கள் இம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் மகிந்த றாஜபக்ஷ கடந்த சனி ,ஞாயிறு ஆகிய இரு தினங்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருத்தார். அவருடைய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்கள் இடம்பெற்றன.
இந்நிலையில், தென்மராட்சி மட்டுவில் பகுதியில் பிரதமர் பொருளாதார மத்திய நிலையத்தை திறக்கும் இடத்தில் ஆர்பாட்டம் மேற்கொள்வதற்காக பஸ் வண்டியில் சென்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை பஸ்ஸிலிருந்து இறங்கவிடாது தடுத்த பொலிசார் அதையும் மீறி இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏழும்பியுள்ள நிலையில் குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்கள்.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவின் தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளமையை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய பணிப்பாளர் உறுதிபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM