காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் மீது பொலிசார் தாக்குதல்  - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Published By: Digital Desk 4

24 Mar, 2022 | 08:49 PM
image

( எம்.நியூட்டன் )

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் பொலிசாரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை விரைவில் ஆரம்பிக்கப்பட்டவுள்ள நிலையில், தற்போது   அதற்கான முன்னாயத்தங்கள் இம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் | Virakesari.lk

பிரதமர் மகிந்த றாஜபக்ஷ  கடந்த சனி ,ஞாயிறு ஆகிய இரு தினங்கள்   யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருத்தார். அவருடைய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்கள் இடம்பெற்றன.

இந்நிலையில், தென்மராட்சி மட்டுவில் பகுதியில் பிரதமர் பொருளாதார மத்திய நிலையத்தை திறக்கும் இடத்தில் ஆர்பாட்டம் மேற்கொள்வதற்காக பஸ் வண்டியில் சென்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை பஸ்ஸிலிருந்து இறங்கவிடாது தடுத்த பொலிசார் அதையும் மீறி இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏழும்பியுள்ள நிலையில் குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவர்  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்கள்.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவின் தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு  அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளமையை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய பணிப்பாளர் உறுதிபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55