நாவல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பிரபல குற்றவாளியான ‘சொத்தி உபாலி’யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களில், ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த பிரபல குற்றவாளியான ‘சொத்தி உபாலி’யின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 27 மற்றும் 29 வயதுடைய கொழும்பு 8 ஐ வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியில் வந்த 5 பேர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர்களை தாக்கி மிரட்டி அந்த வளாகத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
நாவல பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வெள்ளிக்கிழமை (18) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM