சொத்தி உபாலியின் மகன் கைது 

Published By: Digital Desk 4

24 Mar, 2022 | 04:16 PM
image

நாவல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பிரபல குற்றவாளியான ‘சொத்தி உபாலி’யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களில், ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த பிரபல குற்றவாளியான ‘சொத்தி உபாலி’யின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 27 மற்றும் 29 வயதுடைய கொழும்பு 8 ஐ வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் வந்த 5 பேர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர்களை தாக்கி மிரட்டி அந்த வளாகத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

நாவல பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வெள்ளிக்கிழமை (18) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33