(இராஜதுரை ஹஷான்)
பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கம் காரணம் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார பாதிப்பிற்கு அனைத்து அரசாங்கமும் காரணம் என்று குறிப்பிடுவதாயின் விஜயன் காலத்தில் இருந்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும்.
அரசியல் நோக்கமில்லாத வகையில் தான் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளோம். என்பதை முதலில் தெளிவாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஜித் நிவார்ட் கப்ராலின் கருத்திற்கு அதிருப்தி வெளியிட்டார்.
அரசியல் காரணிகள் பற்றி பேசும் தருணம் இதுவல்ல. உண்மையான நோக்கில் சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநரது கருத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருகிறேன் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் புதன்கிழமை இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தின் போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து தெளிவுப்படுத்துமாறு ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநரிடம் வலியுறுத்தினார்.
கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார தாக்கம் தீவிரமடைவதற்கு நல்லாட்சி அரசாங்கம் காரணம் என தரப்படுத்தல்கள் ஊடாக நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை எடுத்துரைத்தார்.பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கு கடந்த அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் குற்றஞ்சாட்டினார்.
மத்திய வங்கியின் ஆளுநரது உரையாடல் முடிவடைந்ததை தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்த பொருளாதார கொள்கையினை அரசாங்கம் முறையாக செயற்படுத்தியுள்ளதா என்பதை முதலில் குறிப்பிடுங்கள்.
அரசியல் நோக்கமற்ற வகையில் சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளோம்.இவ்விடயத்தில் அரசியல் பேசுவதை முதலில் தவிர்த்துக்கொள்ளுங்கள்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.இவ்விடயத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விளையாடுவது பொருத்தமற்றது.
கடந்த அரசாங்கத்தினால் தான் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளமை வருந்தத்தக்கது.அரசியல் பேசுவதற்காக இங்கு வரவில்லை.பொருளாதார நெருக்கடிக்கு இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டுமாயின் விஜயன் காலத்தை பற்றியும் குறிப்பிட்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும்.
மத்திய வங்கி ஆளுநரின் கருத்தினை கடுமையாக விமர்சித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நோக்கி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷஅரசியல் நோக்கிற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படவில்லை.மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்ட கருத்து ரணில் விக்ரமசிங்கவிற்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்குமாயின் அதற்கு மன்னிப்பு கோருகிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM