அரசாங்கத்திடமிருந்து காணிகளை பாதுகாக்கவேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது - ஹர்ஷண ராஜகருணா 

Published By: Digital Desk 4

23 Mar, 2022 | 04:43 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் காணி ஏல விற்பனையாளர் போல் வெளிநாடுகளுக்கு நாட்டு வளங்களை விற்பனை செய்துவருகின்றது. அதனால் அரசாங்கத்திடமிருந்து எமது காணிகளை பாதுகாத்துக்கொள்ளவேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

2021 வரவு - செலவு திட்டம் மக்களுக்குரியதல்ல - ஹர்ஷண ராஜகருணா | Virakesari.lk

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

காணி உரிமை தொடர்பில் நாங்கள் கதைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டில் இருக்கும் மிகவும் பெறுமதியான காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவருகின்றது.

காணி ஏல விற்பனை செய்யும் அரசாங்கமாக மாறி இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அரசாங்கத்துக்கு சொந்தமான பாரியளவிலான காணி இந்தியாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

நிதி அமைச்சர் கடந்த வாரம் இந்தியாவுக்கு சென்றுவந்தார். அவர் அந்த நாட்டுடன் பல ஒப்பந்தங்களை செய்திருந்தார். அதன் காரணமாக இந்திய அரசாங்கம் ஒரு பில்லியன் டொலர் கடன் வழங்கி இருக்கின்றது.

எந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்த பணம் வழங்கப்பட்டது தொடர்பில் யாருக்கும் தெரியாது. அதேபோன்று சீன அரசாங்கத்திடம் இரண்டரை டொலர் பில்லியன் கடன் கேட்டிருக்கின்றது. அதற்கு நாட்டின் முக்கியமான காணிகளை சீனாவுக்கு வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றது. 

அத்துடன் நாட்டில் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியுமான இடங்களை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திரைக்கின்றது. அப்படியானால் அரசாங்கம் காணி ஏல விற்பனையாளர் போன்றே செயற்படுகின்றது. அதனால் இந்த அரசாங்கத்திடம் இருந்து காணிகளை பாதுகாத்துக்கொள்ளவே நாட்டுக்கு ஏற்பட்டிருக்கின்றது. 

மக்களால் அரசாங்கம் அமைக்கப்படுவது தற்காலிகமாகவாகும். ஆனால் அரசாங்கம் அடுத்துவரும் சந்ததியினருக்கு உரித்தான காணிகளையே வெளிநாடுகளுக்கு வழங்கி வருகின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பை அரசாங்கம்...

2025-11-10 16:28:01
news-image

வவுனியா - புளியங்குளம் வரையான 14...

2025-11-10 16:24:34
news-image

2026 வரவு - செலவுத் திட்டம்...

2025-11-10 15:25:24
news-image

விவசாயிகள் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம்...

2025-11-10 15:23:51
news-image

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவை முக்கிய...

2025-11-10 17:43:31
news-image

ஐ.தே.க.வை கட்டியெழுப்ப 6 மாத கால...

2025-11-10 15:12:05
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகளுக்காக...

2025-11-10 16:53:48
news-image

இலங்கை - சவூதி இடையிலான இருதரப்பு...

2025-11-10 16:37:24
news-image

முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி

2025-11-10 18:47:36
news-image

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

2025-11-10 18:52:51
news-image

அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக ஆசிரியர்கள் டிசம்பரில்...

2025-11-10 18:22:43
news-image

கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி...

2025-11-10 18:12:42