அரசாங்கத்திடமிருந்து காணிகளை பாதுகாக்கவேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது - ஹர்ஷண ராஜகருணா 

Published By: Digital Desk 4

23 Mar, 2022 | 04:43 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் காணி ஏல விற்பனையாளர் போல் வெளிநாடுகளுக்கு நாட்டு வளங்களை விற்பனை செய்துவருகின்றது. அதனால் அரசாங்கத்திடமிருந்து எமது காணிகளை பாதுகாத்துக்கொள்ளவேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

2021 வரவு - செலவு திட்டம் மக்களுக்குரியதல்ல - ஹர்ஷண ராஜகருணா | Virakesari.lk

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

காணி உரிமை தொடர்பில் நாங்கள் கதைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டில் இருக்கும் மிகவும் பெறுமதியான காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவருகின்றது.

காணி ஏல விற்பனை செய்யும் அரசாங்கமாக மாறி இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அரசாங்கத்துக்கு சொந்தமான பாரியளவிலான காணி இந்தியாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

நிதி அமைச்சர் கடந்த வாரம் இந்தியாவுக்கு சென்றுவந்தார். அவர் அந்த நாட்டுடன் பல ஒப்பந்தங்களை செய்திருந்தார். அதன் காரணமாக இந்திய அரசாங்கம் ஒரு பில்லியன் டொலர் கடன் வழங்கி இருக்கின்றது.

எந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்த பணம் வழங்கப்பட்டது தொடர்பில் யாருக்கும் தெரியாது. அதேபோன்று சீன அரசாங்கத்திடம் இரண்டரை டொலர் பில்லியன் கடன் கேட்டிருக்கின்றது. அதற்கு நாட்டின் முக்கியமான காணிகளை சீனாவுக்கு வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றது. 

அத்துடன் நாட்டில் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியுமான இடங்களை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திரைக்கின்றது. அப்படியானால் அரசாங்கம் காணி ஏல விற்பனையாளர் போன்றே செயற்படுகின்றது. அதனால் இந்த அரசாங்கத்திடம் இருந்து காணிகளை பாதுகாத்துக்கொள்ளவே நாட்டுக்கு ஏற்பட்டிருக்கின்றது. 

மக்களால் அரசாங்கம் அமைக்கப்படுவது தற்காலிகமாகவாகும். ஆனால் அரசாங்கம் அடுத்துவரும் சந்ததியினருக்கு உரித்தான காணிகளையே வெளிநாடுகளுக்கு வழங்கி வருகின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி...

2026-07-12 17:08:19
news-image

நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து...

2026-07-12 21:48:41