(எம்.மனோசித்ரா)
இலங்கை மற்றும் இத்தாலிக்கு இடையிலான தண்டனைகள் விதிக்கப்பட்ட குற்றவாளிகளை ஒப்படைத்தலுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை நீதிமன்றத்தால் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டுள்ள திட்டவட்டமாக குறித்துரைக்கப்பட்டுள்ள வேற்று நாட்டு பிரஜை ஒருவர், குறித்த தண்டனையை அந்நபர் தனது பிரஜாவுரிமை கொண்ட நாட்டில் அனுபவிப்பதற்கு ஏற்ற வகையில் குறித்த நாட்டிடம் ஒப்படைப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் 1995 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.
அதேபோல் வேற்று நாடுகளில் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை எமது நாட்டுக்கு ஒப்படைக்கும் சட்ட ஏற்பாடுகளும் குறித்த சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய செயலாற்றுவதற்காக இருதரப்புக்கும் இடையில் குற்றவாளிகளை பரிமாற்றிக் கொள்வதற்கான இலங்கை மற்றும் குறித்த நாட்டுடன் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டிருத்தல் அவசியமாகும்.
அதற்கமைய, இலங்கை அரசும் இத்தாலி அரசுக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM