எரிபொருள், எரிவாயு, மின்சாரம் ஆகிய நெருக்கடிகளுக்கு அடுத்த வாரம் தீர்வு - நிதியமைச்சர்

Published By: Digital Desk 4

22 Mar, 2022 | 03:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள், எரிவாயு  மற்றும் மின்சாரம் ஆகிய அத்தியாவசிய சேவைகளில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு எதிர்வரும் வாரம் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். எரிவாயு இறக்குமதிக்கு தேவையான கடன் பத்திரத்தை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு நிவாரணம் - பஷில் அதிரடி ஆலோசனை |  Virakesari.lk

எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிந்து குறுகிய மற்றும் நீண்டகால கடன்திட்டத்தின் கீழ் 50 கோடி அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கப்பெற்றுள்ளது. அந்நிதி ஊடாக எரிபொருளை கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள்,மருந்து மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளுக்கான மூலப்பொருட்கள் இறக்குமதிகளுக்காக 150 கோடி டொலர் கடனடிப்படையில் கிடைக்கப்பெற்றுள்ளதுடன்,அவற்றை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எரிவாயு இறக்குமதிக்கு தேவையான டொலரை விநியோகிக்க மத்திய வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதுடன்,இறக்குமதிக்கான கடன்பத்திரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய சேவை கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு எதிர்வரும் வாரம் உறுதியான தீர்வு பெற்றுக்கொள்ளப்படும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31