(என்.வீ.ஏ.)
ஹெமில்டன், சிடொன் பார்க் விளையாட்டரங்கில் திங்கட்கிழமையன்று (21) மேற்கிந்தியத் தீவுகளை 8 விக்கெட்களால் வீழ்த்திய பாகிஸ்தான், 2009க்குப் பின்னர் முதல் தடவையாக மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் வெற்றியீட்டியது.
13 வருடங்களுக்கு முன்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மகளிர் உலகக் கிண்ண போட்டியிலேயே பாகிஸ்தான் கடைசியாக வெற்றிபெற்றிருந்தது.
இந்த வெற்றி மூலம் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக 18 போட்டிகளில் எதிர்நோக்கி வந்த தோல்விகள் முடிவுக்குவந்தது.
மழையினால் நீண்ட நேரம் தாமதிக்கப்பட்டு 20 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இப் போட்டியில் நிடா டாரின் அதிசிறந்த பந்துவீச்சு உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை 89 ஓட்டங்களுக்கு பாகிஸ்தான் கட்டுப்படுத்தியது.
நிடா டார் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார்.
ஐந்து மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றது.
டியோண்ட்ரா டொட்டின் (27), அணித் தலைவி ஸ்டெபானி டெய்லர் (18), அஃபி ஃப்ளெச்சர் (12 ஆ.இ.) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 18.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 90 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பங்களாதேஷிடம் தோல்வி அடைந்த போட்டியில் சதம் குவித்த சித்ரா ஆமின் இந்தப் போட்டியில் 8 ஓட்டங்களுடன் முதலாவதாக ஆட்டமிழந்தார்.
எனினும் இவ் வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக விளையாடிய முனீபா அலி மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி 37 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானை பலப்படுத்தினார்.
அணித் தலைவி பிஸ்மா மாறூப் 20 ஓட்டங்களுடனும் ஒமய்மா சொஹெய்ல் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தனர்.
இப் போட்டியில் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் 6 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 3ஆம் இடத்தில் இருக்கின்றது.
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றால் மாத்திரமே அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பைப் பெறும். தோல்வி அடைந்தால், இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றின் போட்டி முடிவுகளிலேயே அதன் அரை இறுதி போட்டிக்கான வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM