மேற்கிந்தியத் தீவுகளை 13 ஆண்டுகளுக்கு பின் வீழ்த்திய பாகிஸ்தான் மகளிர் அணி

Published By: Digital Desk 4

21 Mar, 2022 | 10:25 PM
image

(என்.வீ.ஏ.)

ஹெமில்டன், சிடொன் பார்க் விளையாட்டரங்கில் திங்கட்கிழமையன்று (21) மேற்கிந்தியத் தீவுகளை 8 விக்கெட்களால் வீழ்த்திய பாகிஸ்தான், 2009க்குப் பின்னர் முதல் தடவையாக மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் வெற்றியீட்டியது.

Story Image

13 வருடங்களுக்கு முன்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மகளிர் உலகக் கிண்ண போட்டியிலேயே பாகிஸ்தான் கடைசியாக  வெற்றிபெற்றிருந்தது.

இந்த வெற்றி மூலம் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக 18 போட்டிகளில் எதிர்நோக்கி வந்த தோல்விகள் முடிவுக்குவந்தது.

மழையினால் நீண்ட நேரம் தாமதிக்கப்பட்டு 20 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இப் போட்டியில்  நிடா டாரின் அதிசிறந்த பந்துவீச்சு உதவியுடன்   மேற்கிந்தியத் தீவுகளை 89 ஓட்டங்களுக்கு  பாகிஸ்தான்  கட்டுப்படுத்தியது.

நிடா டார் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார்.

ஐந்து மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றது.

டியோண்ட்ரா டொட்டின் (27), அணித் தலைவி ஸ்டெபானி டெய்லர் (18), அஃபி ஃப்ளெச்சர் (12 ஆ.இ.) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 18.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 90 ஓட்டங்களைப்    பெற்று வெற்றியீட்டியது.

பங்களாதேஷிடம் தோல்வி அடைந்த போட்டியில் சதம் குவித்த சித்ரா ஆமின் இந்தப் போட்டியில் 8 ஓட்டங்களுடன் முதலாவதாக ஆட்டமிழந்தார்.

எனினும் இவ் வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக விளையாடிய முனீபா அலி மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி 37 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானை பலப்படுத்தினார்.

அணித் தலைவி பிஸ்மா மாறூப் 20 ஓட்டங்களுடனும் ஒமய்மா சொஹெய்ல் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இப் போட்டியில் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள்  6 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 3ஆம் இடத்தில் இருக்கின்றது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றால் மாத்திரமே அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பைப் பெறும். தோல்வி அடைந்தால், இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றின் போட்டி முடிவுகளிலேயே அதன் அரை இறுதி  போட்டிக்கான வாய்ப்பு தீர்மானிக்கப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59