மின்சார கட்டணம் 500 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான யோசனை ஒன்றை இலங்கை மின்சார சபை அரசாங்கத்திற்கு முன்வைத்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
![]()
ஆனமடுவ பகுதியில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் இலங்கை மின்சார சபை தனது கட்டணங்களை 500 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்த அவர் மக்கள் வெருமனே மின்குமிழ் களையும், மின்விசிறிகளையும் பார்த்து கொண்டிருக்க வேண்டும் என்றும் நாடு மிக மோசமான பொருளாதார பின்னடைவுக்கு ஆளாகியுள்ளது என்றார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இரண்டு ஆண்டு காலம் நாடு மோசமான பொருளாதார நிலையை சந்திக்க நேர்ந்தது. அதேபோன்று தற்போது உக்ரைன்- ரஷ்யா யுத்தம் நாட்டிற்கு பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். இருப்பினும் இந்நிலையில் பொது பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார கட்டணம் உடன் அதிகரிக்கும் சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM