இந்து சமுத்திரத்தில் போதைப்பொருள், ஆயுத வியாபாரம் குறித்து கண்காணிப்பதற்கு ஒன்றிணைந்த கண்காணிப்பு குழு அவசியம் - இன்டர்போல் தலைவர்

Published By: Digital Desk 3

21 Mar, 2022 | 12:17 PM
image

(எம்.மனோசித்ரா)

தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததையடுத்து இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரம் அதிகரித்துள்ளமையால், இது தொடர்பில் ஒன்றிணைந்த கண்காணிப்பு குழுவொன்றை ஸ்தாபிப்பது பொறுத்தமானது என்று இன்டர்போல் (சர்வதேச பொலிஸ்) தலைவர் கலாநிதி அஹம்மட் நசார் அல் ரைஸி தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் இன்டர்போல் (சர்வதேச பொலிஸ்) தலைவர் கலாநிதி அஹம்மட் நசார் அல் ரைஸி ஆகியோருக்கிடையில் அண்மையில் டுபாயில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குற்றங்கள் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தலை ஒழித்தல் , சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மேம்படுத்துதல் என்பன இந்த சந்திப்பின் பிரதான கருப்பொருளாகக் காணப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததையடுத்து இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர இதன் போது சுட்டிக்காட்டினார். 

இது தொடர்பில் ஒன்றிணைந்த கண்காணிப்பு குழுவொன்றை ஸ்தாபிப்பது பொறுத்தமானது என்று இன்டர்போல் தலைவர் அஹம்மட் நசார் அல் ரைஸி குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் சர்வதேச பொலிஸாரினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கும் அமைச்சர் சரத் வீரசேகர இதன் போது நன்றி தெரிவித்தார். 

இலங்கை பொலிஸின் சைபர் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், தீவிரவாத மற்றும் அடிப்படைவாத அச்சுறுத்தலைகளை இனங்காண்பதற்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுதல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கான தொடர்புகள் குறித்தும் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07