வடக்கு மக்களை பாதுகாத்து வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம் - யாழில் பிரதமர் மஹிந்த

19 Mar, 2022 | 09:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மக்களை அன்று பாதுகாத்த நாங்கள் இன்றும் அவர்களை பாதுகாத்து வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம்.

இலங்கையில் வாழும் பல்லின சமூகத்தினர் மத்தியில் வரலாற்று காலம் முதல் நல்லுறவு பேணப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

May be an image of 9 people and people standing

யாழ்ப்பாணம் நாகதீப விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

May be an image of 4 people and people standing

விகாரைக்கு வருகை தரும் யாத்திரிகர்களுக்கான வசதிகளை விரிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு பகுதியில் சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட அடையாளங்களை பாதுகாக்கவும்,அபிவிருத்தி செய்யவும் அமரபுர பிரிவின் பௌத்த தேரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள்.

May be an image of 7 people and people standing

1970ஆம் ஆண்டு முதன் முறையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தேன்.

அப்போதைய காலக்கட்டத்தில் இருந்து கலவர சூழ்நிலையினால் நாகதீபத்திற்கு செல்ல முடியவில்லை அதன் பிறகு தற்போதே வருகை தந்துள்ளேன்.

சிவில் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதால் இன்று நாட்டில் எப்பகுதிக்கும் சுதந்திரமாக செல்லும் சூழல் தோற்றம் பெற்றுள்ளது.

1983ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற ஒருசில காரணிகளினால் 30வருட கால சிவில் யுத்தம் தோற்றம் பெற்றது.

தெற்கு மக்கள் வடக்கு மாகாணத்திற்கு வர முடியாத நிலைமை அப்போது காணப்பட்டது.வடக்கு மாகாணத்தை மையமாக கொண்டு தோற்றம் பெற்ற யுத்தம் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக பாதிப்பிற்குள்ளாக்கியது.

30வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாகதீப விகாரை துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டது.

நாகதீப விகாரையினை அபிவிருத்தியை விரிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக 2021ஆம் ஆண்டு அரச பொசன் பண்டிகையை வடக்கு மாகாணத்தில் நடத்த தீர்மானித்திருந்தோம், இருப்பினும் கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் அதனை நடத்த முடியவில்லை.

நாங்கள் வடக்கு மக்களை பாதுகாத்தோம்,இன்றும் பாதுகாக்கவும்,அபிவிருத்தி பணிகளை விரிவுப்படுத்தவும் ஜனாதிபதியும்,அரசாங்கம் பொறுப்புடன் உள்ளது.

நாகதீப விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வு நிறைவடைந்ததை தொடர்ந்து பிரதமர் நயினை நாகபூஷனி அம்மன் கோயிலில் வழிபாட்டில் ஈடுப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன...

2023-05-30 06:35:08
news-image

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை...

2023-05-29 22:22:51
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56