(எம்.மனோசித்ரா)
போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி அமெரிக்க செல்ல முற்பட்ட பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் 64 வயதுடைய பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இவர் நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தலா 5 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் இரு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதோடு , குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM