(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தப்படும்.
எதிர்வரும் நாட்களில் தூர பிரதேச தனியார் போக்குவரத்து சேவை ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் தீவிரமடைந்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவையாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண அதிகரிப்பு எரிபொருள் விலையினை முகாமைத்துவம் செய்யும் வகையில் அமையாது.
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தப்படும் தற்போது, 20 சதவீதமான அளவு பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுப்படுத்தப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் தூர பிரதேச தனியார் பேருந்து சேவையினையும் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
சிசெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுமாறு ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது இருப்பினும் அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக காணப்படுகிறது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்கல் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை தனியார் பேருந்து சேவைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு பிரத்தியேக நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளோம் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM