மட்டக்களப்பில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் 

18 Mar, 2022 | 03:34 PM
image

மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் உள்ள பிரதேசங்களில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி ஏற்றும் விசேட திட்டம் நேற்று வியாழக்கிழமை 17 ஆம் திகதி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிறிநாத் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகுணன் வழிகாட்டலில் இந்த வீடு வீடாக கொரோனா தடுப்பூசி ஏற்றும் விசேட செயற்திட்டம் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின்  கீழ் உள்ள பிரதேசங்களில் முதற்கட்டமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகுணன் கலந்து கொண்டு இந்த தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதனை தொடர்ந்து பொது சுகாதார உத்தியோகத்தர்கள் குழுக்களாக கிராம சேவகர் பிரிவுகளாக பிரிந்து வீடு வீடாக சென்று  தடுப்பு ஊசி ஏற்றும் பணியை ஆரம்பித்தனர். 

குறித்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 50 வீதமான தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசி ஏற்றாமல் உள்ள அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு இந்த கொரோனா தடுப்பூசியை ஏற்ற இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  வைத்தியர் எஸ். சிறிநாத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38