மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் உள்ள பிரதேசங்களில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி ஏற்றும் விசேட திட்டம் நேற்று வியாழக்கிழமை 17 ஆம் திகதி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிறிநாத் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகுணன் வழிகாட்டலில் இந்த வீடு வீடாக கொரோனா தடுப்பூசி ஏற்றும் விசேட செயற்திட்டம் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் உள்ள பிரதேசங்களில் முதற்கட்டமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகுணன் கலந்து கொண்டு இந்த தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதனை தொடர்ந்து பொது சுகாதார உத்தியோகத்தர்கள் குழுக்களாக கிராம சேவகர் பிரிவுகளாக பிரிந்து வீடு வீடாக சென்று தடுப்பு ஊசி ஏற்றும் பணியை ஆரம்பித்தனர்.
குறித்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 50 வீதமான தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசி ஏற்றாமல் உள்ள அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு இந்த கொரோனா தடுப்பூசியை ஏற்ற இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் எஸ். சிறிநாத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM