எல்லே புகையிரத நிலையத்திலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த போது தவறவிட்டப்பட்ட மடிகணினி மற்றும் பயணப் பொதி ஜேர்மன் நாட்டு பிரஜையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (16) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
குறித்த உல்லாசப் பிரயாணியான ஜேர்மன் நாட்டு பிரஜை எல்லே புகையிரத நிலையத்திலிருந்து நுவரெலியா செல்வதற்கு புகையிரதத்தில் நானுஓயா நோக்கி பயணித்துள்ளார்.

இந்நிலையில், உல்லாசப் பிரயாணி நுவரெலியாவில் தான் தங்கும் ஹோட்டலில் தமது குழுவினருடன் தங்குவதற்கு ஆயத்தமானபோது தனது நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான மடிகணினியும் , பயணப்பொதியும் புகையிரதத்தில் தவறவிட்டமை தெரிய வந்துள்ளது.
உடனடியாக ஹோட்டல் ஊழியர் ஒருவரது உதவியோடு கண்டி சுற்றுலா பொலிஸாருக்கு அறிவித்ததனை தொடர்ந்து பொலிஸார் நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிபருக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தினார்.
நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிபர் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத்தினுள் சோதனையிட்ட போது உல்லாசப் பிரயாணி தொலைத்த அவரது உடமைகள் கண்டு பிடிக்கப்பட்டு உரியவரான ஜேர்மன் நாட்டு பிரஜையான டேவிட் பென்ஜமினிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM